sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

/

முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

முதியவரிடம் ரூ.29.88 லட்சம் மோசடி செய்த மூவர் கைது


ADDED : அக் 27, 2025 01:04 AM

Google News

ADDED : அக் 27, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையை சேர்ந்த, 62 வயது முதியவர், சென்னையில் அரசு தலைமை இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஏப்ரலில் இவரது மொபைல்போனில் பேசிய நபர்கள், பல கோடி ரூபாய் மோசடியில், அவரது ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி மிரட்டினர்.

ஒரு கட்டத்தில், முதியவரை விடுவிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. பயந்துபோன முதியவர், அவர்களது வங்கிக்கணக்கிற்கு, 29.88 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம், புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில், முதியவர் பணம் அனுப்பிய வங்கிக்கணக்கில் இருந்து, மற்றொரு வங்கிக்கணக்கிற்கு, 6 லட்சம் ரூபாய் மாற்றப்பட்டு, எடுக்கப்பட்டது தெரிந்தது. போலீசார், அந்த வங்கிக்கணக்கின் விபரங்களை விசாரித்தனர். அது, முதியவரிடம் ஆன்லைனில் மோசடி செய்தவர்களின் வங்கிக்கணக்கு என தெரிந்தது.

இது தொடர்பாக, கேரள மாநிலம், மறையூரைச் சேர்ந்த நபீல், 30, முகமது ஹரிஸ், 34, முகமது ரமீஸ், 28, ஆகிய மூவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us