sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அனுமதி இன்றி மண் எடுத்த மூவர் கைது; மூவருக்கு வலை

/

அனுமதி இன்றி மண் எடுத்த மூவர் கைது; மூவருக்கு வலை

அனுமதி இன்றி மண் எடுத்த மூவர் கைது; மூவருக்கு வலை

அனுமதி இன்றி மண் எடுத்த மூவர் கைது; மூவருக்கு வலை


ADDED : நவ 19, 2024 11:40 PM

Google News

ADDED : நவ 19, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம் பகுதியில், சட்ட விரோதமாக மண் எடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெகமம் அருகே, ஆலமரத்து மேடு பகுதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், சட்ட விரோதமாக மண் எடுப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கப்பளாங்கரை வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மண் எடுப்பதை உறுதி செய்து, நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருந்த லாரி டிரைவர்கள் கனகராஜ், 38, ராம், 38, மற்றும் பொக்லைன் டிரைவர் வினோத், 24, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், நிலத்தின் உரிமையாளர் சுப்ரமணியம், பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் ஜக்கார்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் பனப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய மூவரையும் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us