ADDED : மார் 07, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: ஈச்சனாரியிலுள்ள தனியார் பல்கலையில், பி.காம் இரண்டாமாண்டு படிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீராம், 20, கார்த்திக் என்பவரது வீட்டில், ரோஹித், சுஜித் உள்ளிட்ட ஆறு பேருடன் தங்கியுள்ளார்.
கடந்த 3ம் தேதி இரவு அறையினுள் புகுந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி, ஸ்ரீராமின் லேப்டாப், மொபைல்போன் மற்றும் ரோஹித்தின் மொபைல் போனையும் பறித்து, தங்கள் கூட்டாளிகளுடன் தப்பினர்.
ஸ்ரீராம் புகாரில் மதுக்கரை போலீசார் தப்பிய கும்பலை தேடினர். இதில், சிவகங்கையை சேர்ந்த, 17 வயது சிறுவன், நவீன்குமார், 20 மற்றும் திருமலையாம்பாளையத்திலுள்ள தனியார் இன்ஜி., கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் விஷால், 19 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

