/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் பரிதாப பலி
/
வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் பரிதாப பலி
ADDED : ஜூலை 27, 2025 11:09 PM
கோவை; தஞ்சாவூரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 21. இவர், கோவை அத்திப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். சின்ன வேடம்பட்டி அருகே, திடீரென நிலை தடுமாறி விழுந்தார். எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. படுகாயமடைந்த ஸ்ரீதரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* சரவணம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன்,78. இவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சத்தி ரோடு விஸ்வாசபுரம் பகுதியில் சென்றார். பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், கோவிந்தன் மீது மோதியது. கோவிந்தன் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விரு விபத்துகள் குறித்து, கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
* மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார், 37. இவர் ஸ்கூட்டரில் போத்தனூரில் இருந்து, செட்டிப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த ஒரு பைக், சரவணக்குமார் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த சரவணக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.