sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரையிறுதிக்குள் நுழைந்த மூன்று பள்ளிகள்

/

 அரையிறுதிக்குள் நுழைந்த மூன்று பள்ளிகள்

 அரையிறுதிக்குள் நுழைந்த மூன்று பள்ளிகள்

 அரையிறுதிக்குள் நுழைந்த மூன்று பள்ளிகள்


ADDED : டிச 20, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 20, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை டிச. 20-: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்திய, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பங்கேற்ற மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: சிங்காநல்லூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றில் 286 மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். 'எச்' அணியின் ஹரிஷ்மிதா, மகாலெட்சுமி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் கீதா சுதர்சன் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.

விவேகானந்தா கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி: இருகூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், 180 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர்.

'எச்' அணியின் பிரகதி, சவுமித்ரா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி இயக்குனர் சுந்தரநாதன், முதல்வர் வனிதாமணி இறுதி போட்டியில் பங்கேற்ற, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: சிங்காநல்லூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். 'ஏ' அணியின் ஹரி பிரசன்னா, அகிலேஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். துணை முதல்வர் இந்திரா இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us