/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருக்குறள் வள்ளி கும்மியாட்டம் வரும் 9ம் தேதி அரங்கேற்றம்
/
திருக்குறள் வள்ளி கும்மியாட்டம் வரும் 9ம் தேதி அரங்கேற்றம்
திருக்குறள் வள்ளி கும்மியாட்டம் வரும் 9ம் தேதி அரங்கேற்றம்
திருக்குறள் வள்ளி கும்மியாட்டம் வரும் 9ம் தேதி அரங்கேற்றம்
ADDED : நவ 06, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; தமிழ் சமூகத்தின் பாரம்பரிய கலைகளில், முதல் கலையான, வள்ளி கும்மி ஆட்டத்திற்கு, அன்னுார் ஏ.எம்.காலனியில், 100க்கு மேற்பட்டோர் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்றனர்.
இதையடுத்து வருகிற 9ம் தேதி அன்னுார், கோவை ரோட்டில் உள்ள கொங்கு செட்டியார் மகாலில், வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு முளைப்பாரி எடுத்தலும், 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடும், ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தலும், இதையடுத்து அரங்கேற்றமும் நடக்கிறது. நிகழ்ச்சியை கண்டு களிக்க பொதுமக்களுக்கு கலைக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.