ADDED : அக் 28, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம், வடசித்துாரைச்சேர்ந்தவர் காஜா மொய்தீன், 53, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், சட்ட விரோதமாக புகையிலை பொருள் விற்றது உறுதியானதைத்தொடர்ந்து, கடையில் இருந்து, 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.