ADDED : மார் 31, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தில் புகையிலைப் பொருள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம், 70, பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடையில் சோதனை மேற்கொண்ட போது, 400 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மகாலிங்கத்தை கைது செய்தனர்.

