ADDED : அக் 17, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம் சுற்று வட்டார பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, நெகமம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதில், நெகமம் தளி ரோட்டில் நவநீதகிருஷ்ணன், 50, என்பவர் மளிகை கடையில் இருந்து 39 புகையிலை பொருள் பாக்கெட்டுகள் மற்றும் ஆவலப்பம்பட்டியில் கிருஷ்ணசாமி, 76, என்பவர் கடையில் இருந்து, 15 புகையிலை பொருள் பாக்கெட்டுகள், என மொத்தம் 54 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.