sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : நவ 09, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்தசஷ்டி விழா


ஈச்சனாரி, கச்சியப்பர் மடாலய சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், திருச்செந்தில் கோட்டத்தில் 47ம் ஆண்டு மகா கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இறுதி நாளான இன்று, காலை, 11:00 மணி முதல், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.

பகவத்கீதை சொற்பொழிவு


ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் ஆன்மீக சொற்பொழிவு மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசனில், 'பகவத்கீதை' தலைப்பில், சொற்பொழிவாளர் அவினாசிலிங்கம் உரையாற்றுகிறார்.

திருவீதி உலா


சுக்கிரவார்பேட்டை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கந்த சஷ்டிப் பெருவிழா நடக்கிறது. காலை, 6:30 முதல் மதியம், 12:30 மணி வரை, அபிஷேகம், சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல், சந்தனக்காப்பு, தீபாராதனை, சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீராடல் நடக்கிறது.

பட்டமளிப்பு விழா


சுங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரியில், 40வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரி கலையரங்கில் காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலாளரான வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

ஓவியப் போட்டி


கோவை விழாவை முன்னிட்டு மாபெரும் ஓவியப் போட்டி இன்று நடக்கிறது. அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. 200க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தொழில்முனைவோர் தினம்


பிச்சனுார், ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பெட்ரோலியம் பொறியியல்துறை சார்பில், தொழில்முனைவோர் மேம்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது.

திருக்குறள் பயிலரங்கு


திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'மேன்மைக்குரிய ஏழு தலைமைப் பண்புகள்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us