sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரளிக்காடு, குருந்தமலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

/

பரளிக்காடு, குருந்தமலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

பரளிக்காடு, குருந்தமலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

பரளிக்காடு, குருந்தமலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு


ADDED : ஜன 20, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று காரமடை அருகே உள்ள பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூரில், சூழல் சுற்றுலா மையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். பூச்சமரத்தூர் பரளிக்காடுக்கு இடையே உள்ள ஆற்று பகுதியில் பள்ளி குழந்தைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் ஆற்றினை கடந்த செல்ல, அதற்கு பாலம் அமைக்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் கடம்பன் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் மின்சார வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், கோவை சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ரமேஷ், குருந்தமலை அறங்காவலர் குழு தலைவர் மோகன பிரியா, செயல் அலுவலர் வனிதா, சுரேந்திரன், ராயப்பன், அமுதவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.-






      Dinamalar
      Follow us