/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் 'பார்க்கிங்' இல்லை சுற்றுலா பயணியர் தவிப்பு
/
வால்பாறையில் 'பார்க்கிங்' இல்லை சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறையில் 'பார்க்கிங்' இல்லை சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறையில் 'பார்க்கிங்' இல்லை சுற்றுலா பயணியர் தவிப்பு
ADDED : ஜன 16, 2025 11:38 PM

வால்பாறை,; வால்பாறையில் பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் சுற்றுலாபயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாவட்டம், வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் அங்கு திரண்டுள்ளனர்.
தொடர் விடுமுறையால் அங்கு வரும் சுற்றுலாபயணியர், தங்களது வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், நடுரோட்டில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சுற்றுலாபயணியர் கூறுகையில், 'ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாஸ்தலங்களை போல, வால்பாறையை கண்டு ரசிக்க அதிக அளவில் சுற்றுலாபயணியர் வந்துள்ளனர். ஆனால் வாகனங்கள் நிறுத்த போதிய வசதி இல்லாததால், அவதிக்குள்ளாகி வருகிறோம். நகராட்சி சார்பில் சுற்றுலாவாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நகரில் சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும்' என்றனர்.