sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர் அவதி

/

'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர் அவதி

'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர் அவதி

'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர் அவதி


ADDED : ஜன 18, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகினர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் வால்பாறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தனியார்தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை நகரில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், போதிய 'பார்க்கிங்' வசதி இல்லாததால், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், வால்பாறை நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் தவிக்கின்றனர்.

சுற்றுலா பயணியர் கூறுகையில், 'தொலை துாரத்திலிருந்து வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க குடும்பத்துடன் வருகிறோம். ஆனால், மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் ரோட்டில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலா பயணியர் நலன் கருதி வால்பாறை நகரில் நகராட்சி சார்பில் 'பார்க்கிங்' வசதி செய்து தர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us