sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்

/

மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்

மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்

மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்


ADDED : நவ 05, 2025 12:10 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: கணுவக்கரையிலிருந்து புளியம்பட்டி செல்லும் பாதை மோசமாக உள்ளதால் அரசு டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.

அன்னூர் அருகே உள்ள கணுவக் கரையிலிருந்து, கண்ணப்ப நகர், ஆலபாளையம், காந்தி நகர் வழியாக கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நீலிபாளையத்தில் சேர்ந்து அங்கிருந்து புளியம்பட்டி வரை ஏ ஆர் 1 அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது.

தற்போது இந்த வழித்தடத்தில் பாதை மோசமாக உள்ளதால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப் பட்டுவிட்டது. இது குறித்து கணுவக்கரை மக்கள் கூறுகையில், 'கணுவக்கரையில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் மற்றும் கல்லூரிக்கு செல்வோர் கணுவக் கரையிலிருந்து புளியம்பட்டி செல்கின்றனர்.

இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஏ ஆர் 1 டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்து போக்குவரத்து ஊழியரிடம் கேட்டபோது சாலை மிக மோசமாக உள்ளது. டயர் பழுதாகிறது. வாகனமும் பழுதாகிறது. என்று கூறிவிட்டனர். இந்தப் பாதையில் சாலை அமைத்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. இது குறித்து பலமுறை அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இப்பகுதி மாணவ, மாணவியர் தற்போது இந்த பாதையில் செல்லும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்தபடி புளியம்பட்டி பள்ளிக்கு செல்கின்றனர்.

விரைவில் இந்த பாதையில் சாலை அமைக்க வேண்டும். மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us