sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'எறிச்சில்' உருவாக்கிய கோவையின் ஊர்கள்

/

 'எறிச்சில்' உருவாக்கிய கோவையின் ஊர்கள்

 'எறிச்சில்' உருவாக்கிய கோவையின் ஊர்கள்

 'எறிச்சில்' உருவாக்கிய கோவையின் ஊர்கள்


ADDED : டிச 31, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ ன்றைய பொள்ளாச்சி என நாம் அறியும் நகரம், இடைக்கால கல்வெட்டுகளில், 'எறிச்சில் பொழில்வாய்ச்சி' என்ற அழகிய பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பெயரே, கொங்கு நாட்டின் பண்டைய நிலவியல், குடியேற்றம் மற்றும் சமூக அமைப்புகளை ஆழமாகப் புரிந்துகொள்ள, ஒரு கதவாகத் திறக்கிறது. இந்தப் பெயரில் வரும் 'எறிச்சில்' என்ற சொல் குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்ட கல்வெட்டுகளில் சிறக்கெறிச்சில், புத்தெறிச்சில், நெருப்பெறிச்சில் போன்ற ஊர்ப்பெயர்கள் இடம் பெறுகின்றன. இவை குறிப்பாக, பல்லடம் பகுதியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

'எறிச்சில்' என்பது எறி என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. எறி என்பதற்கு அழி, கொல், துண்டாக்கு என்ற பொருள்கள் உண்டு. இதன் அடிப்படையில், காடழித்து உருவாக்கப்பட்ட நிலம் அல்லது ஊர் என்பதே, எறிச்சில் என்ற சொல்லின் பொருளாக இருந்திருக்கலாம். இதற்கு வலுவான சான்றாக, சூலுார் அருகே உள்ள சிறக்கெறிச்சில் (இன்றைய செலக்கரிச்சல்) என்ற ஊர் விளங்குகிறது. இங்கு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொங்கு நாட்டு வழக்கில் 'சிறை' என்பது, காட்டின் ஓரப்பகுதி என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக, காட்டை ஒட்டி உருவான குடியிருப்புகளே இவ்வாறான பெயர்களைப் பெற்றன என்பதை அறிய முடிகிறது.






      Dinamalar
      Follow us