/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் சந்தையில் ரூ.2.38 கோடி வர்த்தகம்
/
உழவர் சந்தையில் ரூ.2.38 கோடி வர்த்தகம்
ADDED : ஜன 03, 2025 10:06 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 2.38 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.
பொள்ளாச்சி நகராட்சி உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்துகின்றனர். இங்கு, மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், மக்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மாதம், 2.38 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த டிச., மாதம் நாளொன்றுக்கு, 7 லட்சத்து, 68 ஆயிரத்து, 928 ரூபாய் மதிப்புள்ள, 15,738 கிலோ காய்கறிகள் வரத்து இருந்தது. ஒரு நாளுக்கு, 63 விவசாயிகளும், 3,147 நுகர்வோர்களும் வந்தனர்.
கடந்த மாதம் மொத்தம், 487.9 மெட்ரிக் டன் காய்கறி வரத்து காணப்பட்டது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, 2 கோடியே, 38 லட்சத்து, 36 ஆயிரத்து, 770 ரூபாயாகும். மொத்தம், 1,979 விவசாயிகளும், 97,581 நுகர்வோர்களும் உழவர் சந்தையை பயன்படுத்தி உள்ளனர்,' என்றனர்.