/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவி இறந்த சோகம்; கணவன் தற்கொலை
/
மனைவி இறந்த சோகம்; கணவன் தற்கொலை
ADDED : செப் 01, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிங்காநல்லுார், வரதராஜபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம், 72. இவரது மனைவி, 8 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். மகள் கனடாவில் வசிக்கிறார். ஜீவானந்தம் உப்பிலிபாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த ஜீவானந்தம், நேற்று விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உறவினர் செந்தில்குமார், சிங்காநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறினர். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.