sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா

/

சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா

சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா

சி.ஆர்.பி.எப்.,ல் பயிற்சி நிறைவு விழா


ADDED : அக் 25, 2024 10:00 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்.,) வளாகத்தில், 133 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.

கோவை துடியலுார் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய பயிற்சி கல்லுாரி உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த நவம்பர் முதல், 7 பெண்கள் உட்பட, 133 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி வகுப்புகள் நடந்தன. நிறைவு விழா நேற்று காலை நடந்தது. இதில், மத்திய பயிற்சி கல்லுாரி முதல்வர் வெங்கடேஷ், 133 எஸ்.ஐ.,க்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அனைத்து வீரர்களும் உறுதிமொழி ஏற்றனர். தனி திறனில் தங்களுடைய திறமையை நிரூபித்த நான்கு எஸ்.ஐ.,க்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பயிற்சி கல்லுாரியில் முதல்வர் வெங்கடேஷ் பேசுகையில், ''பயிற்சி முடித்து செல்லும் அனைத்து எஸ்.ஐ.,க்களும் நாட்டுப் பற்றுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும்'' என்றார். நிகழ்ச்சியையொட்டி யோகாசனம், கைகளால் ஓடு உடைத்தல், கலாசாரத்தை வெளிப்படுத்தும் பெண்கள் நடனம் உள்ளிட்டவை நடந்தன.






      Dinamalar
      Follow us