/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லூரியில் எஸ்.ஐ.,க்கள் பயிற்சி நிறைவு விழா
/
சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லூரியில் எஸ்.ஐ.,க்கள் பயிற்சி நிறைவு விழா
சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லூரியில் எஸ்.ஐ.,க்கள் பயிற்சி நிறைவு விழா
சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லூரியில் எஸ்.ஐ.,க்கள் பயிற்சி நிறைவு விழா
ADDED : செப் 29, 2024 01:41 AM

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள, சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியில், 567 எஸ்.ஐ.,க்கள் பங்கேற்ற பயிற்சி, நிறைவு விழா நடந்தது.
இந்தியா முழுவதும் சி.ஆர்.பி.எப்.,ல் பணியாற்ற தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, கோவை மாவட்டம், கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய பயிற்சி கல்லூரியில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இங்கு கடந்த ஆண்டு செப்., முதல், 40 பெண்கள் உட்பட, 567 நேரடி சப் இன்ஸ்பெக்டர்களாக, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களை சமாளித்து மக்களை காத்தல், உள்நாட்டு தீவிரவாத கும்பல், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளிடம் இருந்து நாட்டை காத்தல் தொடர்பான, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி நிறைவு விழாவில், சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வர் வெங்கடேஷ் பேசுகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், அமைதியை நிலைநாட்டவும், ஆரோக்கியமான சமுதாயம் அமையவும், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர். நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உணர்ந்து, நாட்டுப்பற்று, தியாக உணர்வுடன் பொதுமக்களுடன் இணைந்து, தீவிரவாத சக்திகளை ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபட வேண்டும், என்றார்.
முன்னதாக, அவர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயிற்சியின் போது பல்வேறு துறைகளில், சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர் இந்தியாவின் கலை, கலாசாரங்களை விளக்கும் நடனம், யோகாசனம், மல்லர் கம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.