sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அளவிலான கராத்தே போட்டி 19 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி

/

தேசிய அளவிலான கராத்தே போட்டி 19 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி

தேசிய அளவிலான கராத்தே போட்டி 19 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி

தேசிய அளவிலான கராத்தே போட்டி 19 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 02, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தேசிய கராத்தே போட்டிக்கு, 19 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வரும், 11 முதல், 15ம் தேதி வரை தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு ஏற்கனவே மாவட்ட, மாநில அளவில் தங்கம் வென்ற வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

அதன்படி, கோவையில் இருந்து, 12 பேர் சப் ஜூனியர் பிரிவிலும், ஜூனியர் பிரிவில் மூன்று பேர் உட்பட, 19 பேர் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு, கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள், இலங்கையில் நடக்கும் தெற்கு ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் ஆசியன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.

இப்போட்டிகளுக்கு தகுதி பெறும் விதமாக வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இச்சங்க நிர்வாகிகளான கார்த்திகேயன், ராஜா, ரவிக்குமார் ஆகியோர், தேசிய அளவிலான போட்டியின் நடுவர் அணியில், இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us