sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

படியில் தொங்கியபடி பயணம்; தனியார் பஸ் பறிமுதல்

/

படியில் தொங்கியபடி பயணம்; தனியார் பஸ் பறிமுதல்

படியில் தொங்கியபடி பயணம்; தனியார் பஸ் பறிமுதல்

படியில் தொங்கியபடி பயணம்; தனியார் பஸ் பறிமுதல்


ADDED : ஜூலை 02, 2025 09:57 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த தனியார் பஸ்ஸை, வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் மூன்றாம் எண் கொண்ட தனியார் பஸ், நேற்று முன்தினம் காரமடையை கடந்து வெள்ளியங்காடு செல்லும் போது, அதிக அளவில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது.

மேலும், அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் படியில் தொங்கியபடி பயணம் செய்த நிலையில், அது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியக்குமார், சம்பந்தப்பட்ட பஸ்ஸை நேற்று பறிமுதல் செய்தார்.

மேலும் மாணவர்களை படியில் தொங்கியபடி பயணம் செய்ய அனுமதித்த பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் பொள்ளாச்சியில் செயல்படும் அரசு போக்குவரத்து புத்தாக்க பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.--

------






      Dinamalar
      Follow us