/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் மீது லாரி மோதல் த.வெ.க. நிர்வாகி பலி
/
பைக் மீது லாரி மோதல் த.வெ.க. நிர்வாகி பலி
ADDED : பிப் 12, 2026 05:25 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, செங்குட்டைப்பாளையம் தண்ணீர் பந்தலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நேரு, 37. இவர், த.வெ.க. தெற்கு நகர துணை செயலாளராக இருந்தார்.
இவருக்கு திருமணாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில், இரண்டாவது மகன் பிறந்த நாள் என்பதால் நேற்றுமுன்தினம், மனைவி சாந்தினி மகன்களுக்கு துணி எடுக்க பொள்ளாச்சி வந்தார்.
இதையடுத்து, பொள்ளாச்சியில் இருக்கும் மனைவி, குழந்தைகளை அழைக்க நேரு பைக்கில் வந்தார்.
புளியம்பட்டி அருகே வந்த போது, ரோட்டின் குறுக்கே பை-பாஸ் ரோடுக்கு லாரி சென்றது. எதிர்பாராதவிதமாக லாரி, பைக் மீது மோதியது.
விபத்தில், படுகாயமடைந்த நேரு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து, மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

