sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 2151 நோயாளிகளுக்கு  சிகிச்சை'

/

'மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 2151 நோயாளிகளுக்கு  சிகிச்சை'

'மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 2151 நோயாளிகளுக்கு  சிகிச்சை'

'மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 2151 நோயாளிகளுக்கு  சிகிச்சை'


ADDED : செப் 29, 2024 01:37 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாரடைப்பால் பாதிக்கப்பட்ட, 2151 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்., 29ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று, இதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.

அதன் பின், அவர் கூறியதாவது:

உடலின் முக்கிய உறுப்பான இதயம், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன், ஊட்டச்சத்து வழங்குகிறது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால், புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இதய நோய் ஏற்படுகிறது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 30 லட்சம் பேர் இதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இது, உலக அளவில் ஏற்படும் உயிரிழப்பில், 5ல் ஒன்றாகும்.

தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில், 60 சதவீதம் இதய நோய் பாதிப்பால் மட்டும் ஏற்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் வாயிலாக, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறையில் ஒரு மாதத்திற்கு சராசரியாக, 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை வெளிநோயாளிகளும், 300 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இருதயவில் துறையில், ஒவ்வொரு மாதமும் 2,000 எக்கோ கார்டியோகிராபி (எக்கோ) பரிசோதனை செய்யப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.சி.யு) ஒரு மாதத்திற்கு, 200 முதல், 250 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழகத்திலேயே மிக அதிக அளவில், கடந்த ஆண்டில் மட்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட, 2151 பேருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை இருதயவியல் துறையில், கேத் லேப் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இதுவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனைகள் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிகள் செய்யப்பட்டுள்ளன. 84 பேருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது ஓ.சி.டி., ஐ.வி.யு.எஸ்., ஐ.ஏ.பி.பி., ஆகிய அதிநவீன கருவிகளை பயன்படுத்தி ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு வருகிறது. பிறவி இருதய குறைபாடுகளை சரி செய்யும் டிவைஸ் கிளோசர் சிகிச்சை இதுவரை, 17 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, உலக இதயத் தினத்தையொட்டி, மருத்துவ மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதய மருத்துவத் துறை சார்பில், பல்வேறு துறை டாக்டர்கள், நர்சுகள் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us