/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனம் அல்லாத பகுதியில் மரம் வளர்க்க திட்டம்
/
வனம் அல்லாத பகுதியில் மரம் வளர்க்க திட்டம்
ADDED : ஜூலை 30, 2025 08:24 PM
- நமது நிருபர் -
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, வனப்பகுதி மட்டுமல்லாமல், வனம் அல்லாத பகுதிகளில் மரக்கன்று நடவும், புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள 'செக்போஸ்ட்'களில், பாலித்தீன் புழக்கத்தை கட்டுப் படுத்தவும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
அதன்படி, புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதிகளில் பாலித்தீன் அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும். புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பாலிதீன் பொருட்களுடன் காப்பகத்துக்குள் நுழைவதை தவிர்க்கும் வகையில், 'செக்போஸ்ட்'களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.
வனம் அல்லாத நகரப்பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

