sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'எஸ்டேட்களில் வெட்டிய மரத்தை வெளியில் கொண்டு போகக்கூடாது!'

/

'எஸ்டேட்களில் வெட்டிய மரத்தை வெளியில் கொண்டு போகக்கூடாது!'

'எஸ்டேட்களில் வெட்டிய மரத்தை வெளியில் கொண்டு போகக்கூடாது!'

'எஸ்டேட்களில் வெட்டிய மரத்தை வெளியில் கொண்டு போகக்கூடாது!'


ADDED : செப் 15, 2025 09:34 PM

Google News

ADDED : செப் 15, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில் வெட்டப்படும் மரங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கூடாது என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எம்.ஜி.ஆர்., தோட்ட தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் அமீது, தொழிற்சங்க தலைவர்கள் வினோத்குமார், சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கம் சார்பில், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம், 1949ன் படி மரத்தை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெட்டிய மரங்கள் தேயிலை தொழிற்சாலைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மாவட்ட வனக்குழு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், மரம் வெட்டும் ஒப்பந்ததாரர்கள், விதிமுறையை மீறி மரங்களை வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மலைப்பாதையில் அதிக பாரத்துடன் லாரிகள் செல்லும் போது விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us