sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடைபாதையில் ஆக்கிரமிப்பு; நடந்து செல்வோர் பாதிப்பு

/

நடைபாதையில் ஆக்கிரமிப்பு; நடந்து செல்வோர் பாதிப்பு

நடைபாதையில் ஆக்கிரமிப்பு; நடந்து செல்வோர் பாதிப்பு

நடைபாதையில் ஆக்கிரமிப்பு; நடந்து செல்வோர் பாதிப்பு


ADDED : செப் 24, 2024 11:45 PM

Google News

ADDED : செப் 24, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகர் பகுதியில் உள்ள குறுகலான ரோட்டில் தான், அனைத்து வாகனங்களும் செல்கின்றன. நகரில் வாகன நெரிசலால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டின் இருபுறமும் மக்கள் நடந்து செல்லும் வகையில், தடுப்புக்கம்பியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது.

இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் நிம்மதியாக நடந்து சென்றனர். இந்நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் மீண்டும் கடைகள் வைத்துள்ளனர்.

பொதுமக்கள் கூறியதாவது: நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளதால், காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குறுகலான ரோட்டில் நடந்து செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.

நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us