/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை அருகே யானை தாக்கி பழங்குடியின வாலிபர் பரிதாப பலி
/
வால்பாறை அருகே யானை தாக்கி பழங்குடியின வாலிபர் பரிதாப பலி
வால்பாறை அருகே யானை தாக்கி பழங்குடியின வாலிபர் பரிதாப பலி
வால்பாறை அருகே யானை தாக்கி பழங்குடியின வாலிபர் பரிதாப பலி
ADDED : ஏப் 15, 2025 07:02 AM

வால்பாறை; கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து, சுற்றுலாபயணியர் அதிக அளவில் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், அதிரப்பள்ளி ரோட்டில் பந்தடிப்பாலம் அரிச்சல்பட்டி என்ற செட்டில்மென்ட் பகுதியைச்சேர்ந்த பழங்குடியின வாலிபர் செபஸ்டியன், 20. இவர் நேற்றுமுன்தினம் செட்டில்மென்ட் பகுதி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில், தேன் எடுப்பதற்காக நண்பர்கள் 4 பேருடன் சென்றார்.
தேன் எடுத்துவிட்டு இரவு, 10:00 மணிக்கு வீடு திரும்பும் போது, எதிரே வந்த யானை, செபஸ்டியனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்த அதிரப்பள்ளி வனத்துறையினர், சாலக்குடி டி.எப்.ஓ., லட்சுமி உத்தரவின் பேரில், இறந்த பழங்குடியின வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரள வனத்துறையினர் கூறுகையில், 'கேரள மாநிலத்தில் தற்போது வறட்சி நிலவும் நிலையில், வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. குறிப்பாக, யானைகள் பகல் நேரத்திலேயே தண்ணீர் மற்றும் உணவு தேடி வனத்தைவிட்டு வெளியே வருகின்றன.
இது போன்ற சூழ்நிலையில், பழங்குடியின மக்கள் விவசாய பொருட்களை தேடி வனத்திற்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.