/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி
/
துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி
துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி
துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி
ADDED : ஜன 28, 2026 08:16 AM
வால்பாறை: வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக கடந்த, 1957ம் ஆண்டு ஜனவரி, 2ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட குருசாமி, ஞானமுத்து, பழநி ஆகியோர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் இறந்தனர். அவர்களுக்கு, ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தின் சார்பில், 69ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பொதுசெயலாளர் மோகன் தலைமையில் நடந்தது.
எம்.எல்.எப்., தொழிற்சங்க மாநில செயலாளர் கல்யாணி, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் மாரிமுத்து, பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு பொதுசெயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ராஜேந்திரன் சங்க கொடி ஏற்றி, உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

