/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஜயகாந்துக்கு சூலுாரில் அஞ்சலி
/
விஜயகாந்துக்கு சூலுாரில் அஞ்சலி
ADDED : ஜன 01, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சூலுாரில் நடந்தது.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சூலுார் சீரணி அரங்கில் நடந்தது.
கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
தே.மு.தி.க., தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று, விஜயகாந்த் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
வடக்கு ஒன்றிய செயலாளர் பாலு, பேச்சியண்ணன், ஸ்டீபன், பூபதி, மருதாசலம், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

