தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிலாளி மரணத்தில் திருப்பம்

 தொழிலாளி மரணத்தில் திருப்பம்

 தொழிலாளி மரணத்தில் திருப்பம்


ADDED : ஏப் 27, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: கோவை மாவட்டம் காரமடை அருகே வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன், 59. கட்டட தொழிலாளி. இவர் கடந்த 25ம் தேதி, வெள்ளியங்காடு பகுதியில் கட்டட வேலை செய்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கருதப்பட்டு, அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரமடை போலீசார் கூறுகையில், மருதப்பனின் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, அவர் மாரடைப்பால் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, அவர் மிகவும் உயரமான ஏணி ஒன்றை தூக்கி வைத்துள்ளார். அப்போது திடீரென மயக்கமடைந்தார். இதில் பார்த்த சிலர் ஏணி மின் கம்பிகளில் உரசியது என தவறாக புரிந்துக்கொண்டனர், என்றனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us