sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்

1


ADDED : மே 11, 2025 11:56 PM

Google News

ADDED : மே 11, 2025 11:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; மதுக்கரை, வழுக்குப்பாறையை சேர்ந்தவர்கள் அகல்யா மற்றும் அக் ஷயா. இவர்கள் இருவரும் இரட்டைசகோதரிகள். இவர்களது தந்தை குழந்தைவேலு மற்றும் தாய் ஸ்ரீதேவி விவசாயம் செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும், கிணத்துக்கடவு முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளனர். இருவருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், அடுத்தடுத்த பதிவு எண்கள் வழங்கப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானதில், இருவரும் பாட அளவில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றாலும், மொத்தமாக ஒரே மதிப்பெண், 555 பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பி.டி.ஏ., தலைவர் திருநாவுக்கரசு மற்றும் மாணவர்கள் என பலர் பாராட்டினர்.

மாணவியர் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வில் இருவரும் 555 ஒரே மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவு உறுதுணையாக இருந்தனர். தற்போது இருவரும் 'நீட்' தேர்வு எழுதி உள்ளோம். இதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us