UPDATED : மே 14, 2026 09:06 PM
ADDED : மே 14, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்:ஈச்சனாரி அருகேயுள்ள முத்து நகரில், திருச்செங்கோடை சேர்ந்த முதலாமாண்டு மாணவர், நண்பர்களுடன் தங்கியுள்ளார்.
கடந்த 12ம் தேதி இரவு நண்பர்கள் அனைவரும் அறையிலிருந்தனர். திடீரென 2 பேர் அறைக்குள் புகுந்தனர். ஒருவர் கத்தியை காட்ட, மற்றொருவர் பணம் கேட்டு மிரட்டினார்.
பயந்துபோன மாணவர் தன்னிடமிருந்த 700 ரூபாயை எடுத்து கொடுத்தார். அதை வாங்கி கொண்டு இருவரும் தப்பினர்.
மாணவர் புகாரில், சுந்தராபுரம் போலீசார் விசாரித்து, விருதுநகர் பிரவீண்குமார், 24, ஈரோடு பாரத், 23, ஆகியோரை கைது செய்தனர்.
