sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சி.ஏ. மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாடு

/

 சி.ஏ. மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாடு

 சி.ஏ. மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாடு

 சி.ஏ. மாணவர்களுக்கான இரண்டு நாள் மாநாடு


ADDED : டிச 13, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( ஐ.சி.ஏ.ஐ.) சார்பில், சி.ஏ. மாணவர்களுக்கான தேசியளவிலான இரண்டு நாள் மாநாடு, பி.எஸ்.ஜி.கல்லுாரியில் நேற்று துவங்கியது.

'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி, மாநாட்டை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ராமசாமி பேசுகையில், ''இந்தியாவில், இன்று 4.25 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், சி.ஏ., படிக்கின்றனர். சி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு முன், பெரிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

இந்த வாய்ப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பரந்து விரிந்து உள்ளது,'' என்றார்.

வனிதா மோகன் பேசுகையில், ''நிறுவனங்களின் நிதி அமைப்பில், சி.ஏ.-வின் பங்கு முக்கியமானது. ஒரு நிறுவனத்தின் சுமுகமான செயல்பாட்டுக்கு, பட்டயக் கணக்காளர் அவசியம்,'' என்றார்.

மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சதீஷ், துணைத் தலைவர் சூர்வாஜித் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us