sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்வி அதிகாரிகளுக்கான இரு நாள் ஆய்வுக்கூட்டம் நிறைவு

/

கல்வி அதிகாரிகளுக்கான இரு நாள் ஆய்வுக்கூட்டம் நிறைவு

கல்வி அதிகாரிகளுக்கான இரு நாள் ஆய்வுக்கூட்டம் நிறைவு

கல்வி அதிகாரிகளுக்கான இரு நாள் ஆய்வுக்கூட்டம் நிறைவு


ADDED : டிச 17, 2024 11:54 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள், வரும் பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்குமாறு, ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாப்பம்பட்டி பிரிவு அருகே கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் என, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம், கடந்த இரு நாட்கள் நடந்தது.

முதல் நாளில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வுக்கூட்டத்தை துவக்கிவைத்து, கல்வித் துறைக்கு ஆசிரியர்களால் அவப்பெயர் ஏற்படாமல், மாணவர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துமாறு கண்டிப்புடன் தெரிவித்தார்.

பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில், இரண்டாம் நாள் ஆய்வுக்கூட்டம் தொடர்ந்தது. அப்போது, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள், வரும் மார்ச் மாதம் துவங்கும் பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறும் வகையில், மாலை நேர வகுப்புகள் நடத்தி, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us