/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் இருவருக்கு 'குண்டாஸ்'
/
கொலை வழக்கில் இருவருக்கு 'குண்டாஸ்'
ADDED : மே 02, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கோவை, குனியமுத்துாரை சேர்ந்தவர் அசாருதீன், 27; மார்க்கெட் தொழிலாளி. வாகன விபத்து தொடர்பாக இவரை, சமாதானத்துக்கு அழைத்த இருவர், அவரை கொலை செய்தனர். குனியமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், குனியமுத்துார் குறிச்சி நகரை சேர்ந்த முகமது ரபீக், 29, அப்பாஸ், 29 இருவரும் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட இவ்விருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையேற்று, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். சிறையில் உள்ள இருவரிடமும் உத்தரவு வழங்கப்பட்டது.

