/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு காதலி... யாருக்கு தாலி மதுரை இளைஞர் தற்கொலை
/
இரு காதலி... யாருக்கு தாலி மதுரை இளைஞர் தற்கொலை
ADDED : செப் 19, 2024 02:28 AM
கோவை:ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்தது வெளியே தெரிந்ததால், குற்ற உணர்வில் இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார், 30, எலக்டிரீசியன். கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தங்கி வேலை செய்கிறார். இவரும் மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கோவையை சேர்ந்த மற்றொரு பெண்ணுடனும், அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் உள்ள காதலிக்கு, பிரேம் குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, விசாரித்ததில் அந்த வாலிபரின் மற்றொரு காதல் பற்றி தெரிந்தது. இது குறித்து கோவையில் உள்ள காதலிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை இரு பெண்களும், அவரிடம் கேட்டுள்ளனர்.
குற்ற உணர்வுக்கு ஆளான அவர், தான் தங்கியிருந்த வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

