sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அமராவதி ஆற்றில் மூழ்கி: சிறுமி உட்பட இருவர் பலி

/

அமராவதி ஆற்றில் மூழ்கி: சிறுமி உட்பட இருவர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி: சிறுமி உட்பட இருவர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி: சிறுமி உட்பட இருவர் பலி


ADDED : நவ 09, 2025 01:03 AM

Google News

ADDED : நவ 09, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமி உட்பட, இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சுல்தானிய பள்ளி வாசல் வீதியை சேர்ந்தவர் பரூக், 37. இவரின் உறவினர் திருமணம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்க வந்த உறவினர்கள், மதியம் செல்லம்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, திடீரென ஆற்றில், பரூக்கின் உறவினர் முகமது ஹசன், 32, இவரது அண்ணன் மகள் ரமலான் பேஹம், 13, ஆகியோர் நீரில் மூழ்கினர்.

இதனை கவனித்த மற்றவர்கள், இருவரையும் காப்பாற்ற போராடினர். இருப்பினும், முடியவில்லை. தகவலறிந்த தாராபுரம் போலீசார், உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர் .

தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடி, இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

வழியிலேயே, இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us