sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண் கழுத்தறுத்து கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

/

பெண் கழுத்தறுத்து கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

பெண் கழுத்தறுத்து கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

பெண் கழுத்தறுத்து கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை


ADDED : அக் 10, 2025 12:33 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பெண்ணை கழுத்தறுத்து கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், புலியகுளம், ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் காஞ்சனாதேவி, 43. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்தார். பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். அப்போது பழக்கமான அம்மன்குளம் ரமேஷ், 43, என்பவருடன் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தினார்.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டதால், வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறியுள்ளார். சவுரிபாளையம், அன்னை வேளாங்கண்ணி நகரில் வீடு இருப்பதாக அறிந்து இருவரும் சென்றனர். வீட்டின் உரிமையாளர் மேரி ஆஞ்சலின், 43, வீட்டை திறந்து காட்டினார்.

அப்போது, மேரி அணிந்திருந்த நகைகளை இருவரும் பறிக்க திட்டமிட்டனர். மூவரும் உள்ளே நுழைந்ததும், மேரி ஆஞ்சலினை கீழே தள்ளி, 6 சவரன் நகையை பறித்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றனர். பீளமேடு போலீசார், ரமேஷ், காஞ்சனா தேவியை கைது செய்தனர்.

கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us