/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் பறித்த இரு பெண்கள் கைது
/
மொபைல்போன் பறித்த இரு பெண்கள் கைது
ADDED : செப் 11, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் லோகேஷ் குமார், 39. தாயாருடன் காந்திபுரத்தில் இருந்து சாய்பாபா காலனிக்கு தனியார் பஸ்ஸில் பயணித்தார்.
பஸ்ஸில் உடன் பயணம் செய்த இரு பெண்கள், லோகேஷ்குமார் தாயாரின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
சக பயணிகள் உதவியுடன், சாய்பாபா காலனி போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நாகம்மாள், 20, அனிதா, 19 எனத் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.