ADDED : அக் 03, 2024 08:03 PM
அ நிறம் | அளவு
வால்பாறை:
வால்பாறை அடுத்துள்ள வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், 48, அசாம் மாநிலத்தை சேர்ந்த பஜார்அலி, 34, ஆகியோர், முன்விரோதம் காரணமாக, சுப்ரமணியனை வழிமறித்து தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இது குறித்து, சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜ், பஜார்அலி, ஆகியோரை கைது செய்தனர்.
