/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்
/
உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 08, 2025 05:26 AM
சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உச்சையனூர், ஆர்.ஆர். நகர், தடாகம் புதூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நாடி சந்தானம், விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது.
7:00 மணிக்கு அம்மனுக்கு நகை பெட்டி கொண்டு வருதல், 9:30 மணிக்கு தீபாராதனை, மூலாலய மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு நந்தா விளக்கு மண்டல பூஜை, 7:00 மணிக்கு தடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில் நாம சங்கீர்த்தன மற்றும் பிருந்தாவன் கலை நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

