sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இடம் பெயர முடியாமல் வனத்தில் யானைகள் தவிப்பு 

/

இடம் பெயர முடியாமல் வனத்தில் யானைகள் தவிப்பு 

இடம் பெயர முடியாமல் வனத்தில் யானைகள் தவிப்பு 

இடம் பெயர முடியாமல் வனத்தில் யானைகள் தவிப்பு 


ADDED : ஜன 14, 2025 09:26 PM

Google News

ADDED : ஜன 14, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:

வால்பாறையில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் யானைகள், இரவில் எஸ்டேட் வழியாக, உணவு மற்றும் குடிநீருக்காக வேறு பகுதிக்கு இடம் பெயர்கின்றன.

இந்நிலையில், பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. ஒலிபெருக்கி சப்தத்தால், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி இடம்பெயர முடியாமல் தவிக்கின்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சப்தம் ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி அமைக்க கூடாது.

இரவு நேரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் மக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் இருசக்கர வாகனத்தில் செல்வதையோ, தனியாக நடந்து செல்வதையோ தவிர்க்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us