ADDED : செப் 09, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை கார் குண்டு வெடிப்புக்கு பின், ரோட்டில் உரிமை கோரப்படாமல் நிற்கும் வாகனங்கள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது. ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 56, வெரைட்டிஹாலில் 96, சரவணம்பட்டியில் 51 பைக், கார்களை போலீசார் கண்காணித்தனர்.
வாகன பதிவு எண்களை கொண்டு, உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியும் எவ்வித தகவல்களும் வராத நிலையில், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் கூறுகையில், ‘வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெற்று உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். தொடர்ந்து பதில் அளிக்கவில்லை எனில், பொது ஏலம் விடப்படும்’ என்றனர்.
