sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேற்றுமையில் ஒற்றுமையே உலகத்திற்கான எதிர்காலம்: சத்குரு பேச்சு

/

வேற்றுமையில் ஒற்றுமையே உலகத்திற்கான எதிர்காலம்: சத்குரு பேச்சு

வேற்றுமையில் ஒற்றுமையே உலகத்திற்கான எதிர்காலம்: சத்குரு பேச்சு

வேற்றுமையில் ஒற்றுமையே உலகத்திற்கான எதிர்காலம்: சத்குரு பேச்சு


ADDED : ஜன 27, 2025 12:37 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு, 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மூவர்ணக் கொடியை ஏற்றி பேசியதாவது:

நம் நாட்டில் யார் அரசர், யார் அதிகாரத்தில் இருக்கிறார் என்பது பற்றி மக்கள் கவலைப்படவில்லை. இங்கு மக்கள் தான் அதிகாரத்தில் இருந்தனர். இது எப்போதுமே ஜனநாயக நாடாக இருந்து வருகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும், நமது கலாசாரமும், நாகரீகமும், மாறாமல் அப்படியே இருந்தது. அதுவே, இந்த தேசத்தின் முக்கியமான மற்றும் தத்துவமான அம்சமாக இருக்கிறது.

ஆன்மீக பாதையில் செல்ல விரும்பிய யாவரும், கிழக்கை நோக்கியே வந்தார்கள். இங்கு கிழக்கு என்றால் இந்தியா. ஒரு காலத்தில் இங்கு, 30 சதவீத மக்கள் வெறுமனே, உள்முகமாக திரும்பும் ஆன்மீக பாதைக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருந்தார்கள். இதை இப்போது நடைபெறும் கும்பமேளாவில் கண்கூடாக பார்க்கலாம். மிகப்பெரிய அளவிலான மக்கள் தொகை வாழ்வில் வேறெந்த விஷயத்திற்காகவும் இல்லாமல், வெறுமனே உள்முகமாக திரும்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாம் ஏன் ஹிந்து என அழைக்கப்பட்டோம். காரணம், வடக்கில் ஹிமாலய மலைப்பகுதி இருக்கிறது. தெற்கில் இந்திய பெருங்கடல் இருக்கிறது. இதனை ஹிந்து சாகரம் என அழைத்தோம். ஹிமாலய பகுதியையும், ஹிந்து சாகரமும் இணைந்து ஹிந்து என்றானது. இந்த நிலத்தை ஹிந்து என அழைத்தோம். அதனால், இங்கு வாழ்ந்த மக்கள், ஹிந்துக்களானார்கள்.

இங்கு, ஒரு குடும்பத்தில் இருக்கும் ஐந்து மக்களுக்கு பத்து கடவுள்கள் இருக்கிறார்கள். வேற்றுமைகள் ஒருபோதும் நமக்கு பிரச்னைக்கான அடித்தளமாக இருந்ததில்லை. இன்று உலகம் இதனை கற்று வருகிறது. நம் பாரதத்தின் வேற்றுமையில், ஒற்றுமை தான் இனி உலகத்தின் எதிர்காலமாக இருக்க போகிறது. இது போன்ற விஷயங்களில், பல்வேறு வகைகளில் இந்தியா தலைமை வகிக்கிறது.இவ்வாறு சத்குரு பேசினார்.






      Dinamalar
      Follow us