sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்

/

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் நகரமைப்பு பிரிவினர் மெத்தனம்


ADDED : மார் 18, 2025 04:25 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சி, 50வது வார்டு ராமலிங்கபுரத்தில், சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல், கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர் மெத்தனமாக உள்ளனர்.

கோவை மாநகராட்சி, 50வது வார்டு, உடையாம்பாளையம் கண்ணபிரான் மில்ஸ் அருகே ராமலிங்கபுரத்தில், 40 அடி சாலையை ஆக்கிரமித்து, ஓட்டு வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சிலர் கடை மற்றும் மெஸ் நடத்துகின்றனர்.

மாநகராட்சியின் முயற்சியால், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில், சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்தோருக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, கீரணத்தத்தில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன.

கெடு விதித்ததால் பலரும் வீடுகளை காலி செய்து விட்டனர். அவ்வீடுகளை இடித்து அகற்றி விட்டு, தார் சாலை போட வேண்டும். வீட்டை காலி செய்து ஓராண்டுக்கு மேலாகியும், மாநகராட்சி கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினால், 40 அடி அகலத்துக்கு தார் ரோடு கிடைக்கும்.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் குமாரிடம் கேட்ட போது, ''கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலருக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us