sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

/

 உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

 உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

 உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 06, 2025 04:57 AM

Google News

ADDED : டிச 06, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: கோட்டூர் பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட பி.ஆர்.எம். அவென்யூ செல்லும் ரோட்டில், தனியார் பள்ளிக்கு அருகே, 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ரோட்டில், குடியிருப்பு பகுதி மக்கள், பள்ளி குழந்தைகள் அழைத்துச் செல்லும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

உருக்குலைந்துள்ள இந்த ரோட்டை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கூறியதாவது: தனியார் பள்ளி அருகே, உருக்குலைந்துள்ள ரோட்டை பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ரோடு மோசமாக இருந்ததால், கிராவல் மண் கொட்டி சரி செய்தோம்.

தற்போது, குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டியதால், சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இவ்வழியாக செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

ரோடு சேறும், சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us