sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணிமனைகளில் பணியிடங்கள் காலி: கூடுதல் பணிச்சுமையில் ஊழியர்கள்

/

பணிமனைகளில் பணியிடங்கள் காலி: கூடுதல் பணிச்சுமையில் ஊழியர்கள்

பணிமனைகளில் பணியிடங்கள் காலி: கூடுதல் பணிச்சுமையில் ஊழியர்கள்

பணிமனைகளில் பணியிடங்கள் காலி: கூடுதல் பணிச்சுமையில் ஊழியர்கள்


ADDED : டிச 15, 2024 11:09 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; அரசு போக்குவரத்து கழகம், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பணிமனைகளில் காலியாகவுள்ள டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனை 1ல், 60 பஸ்கள்; பணிமனை 2ல், 67 பஸ்கள்; பணிமனை 3ல், 61 பஸ்கள்; வால்பாறையில் 38 பஸ்கள் என, 226 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, பணிமனை 1ல், 158 டிவைர்களுக்கு, 150 பேர்; 158 கண்டக்டர்களுக்கு, 137 பேர், பணிமனை 2ல், 176 டிரைவர்களுக்கு 162 பேர்; 176 கண்டக்டர்களுக்கு 166 பேர், பணிமனை 3ல், 160 டிரைவர்களுக்கு 157 பேர்; 160 கண்டக்டர்களுக்கு 159 பேர்; வால்பாறையில் 100 டிவைர்களுக்கு 86 பேர்; 100 கண்டக்டர்களுக்கு 89 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு, உடல் நலபாதிப்புகளால் விருப்ப ஒய்வு பெற்று வருகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் காலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணிமனைகளில், 39 டிரைவர்கள், 43 கண்டக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதால், அவர்கள் ஓட்டிய அரசு பஸ்களை கூடுதல் பணியாக,1 பணி முடித்த டிரைவர், கண்டக்டரை வைத்து இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் பணியில் ஈடுபடுபவர்கள் திடீரென விடுப்பு எடுத்தால், மாற்றுப்பணிக்கான ஊழியர்களை வைத்து, பஸ்சை இயக்க காலதாமதம் ஏற்படுகிறது.

அப்போது, நகர், ஊரகப் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் ஒரு 'ட்ரிப்' செல்ல முடியாத நிலை உருவாகுகிறது. இதனால், உரிய நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கின்றனர்.

மேலும், கூடுதல் பணியில் ஈடுபடுவதால் ஊழியர்கள் பணிச்சுமைக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு தேவையான டிரைவர்கள், நடத்துனர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.






      Dinamalar
      Follow us