/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
/
பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 07, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: சாலையூரில் பல நூறு ஆண்டுகள் பழமையான, பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாவது ஆண்டாக, வைகாசி விசாக விழா நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 3:30 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் பழனி ஆண்டவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள், சின்னச்சாமி சித்தர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்று இறையருள் பெற, விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.