/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் 10ல் வைகுண்ட ஏகாதசி விழா
/
பெருமாள் கோவில்களில் 10ல் வைகுண்ட ஏகாதசி விழா
ADDED : ஜன 02, 2025 08:13 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு வரும், 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. வரும், 10ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும், வரும், 9ம் தேதி காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, 9ம் தேதி, காலை, 10:31 மணிக்கு திருமஞ்சன சேவை, அலங்கார சேவை நடைபெறுகிறது.
வரும், 10ம் தேதி அதிகாலை, 4:50 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, சிறப்பு அலங்கார, பூஜைகள், மஹா தீபாராதனை, தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி மதியம், 12:31 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும், 10ம் தேதி காலை, 4:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில், உற்சவர் புறப்பாடுடன் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

