ADDED : அக் 18, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில், வன்னிக்குமார சுவாமி கலைக்குழு மற்றும் வடக்கு நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த நல்லீசுவரர் கலைக்குழு சார்பில், வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடந்தது.
இதில், தெய்வ வழிபாடு நிறைவு செய்த பின், ஆசிரியர் சிவகுமார் தலைமையில், நெ.10. முத்தூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று வள்ளிக்கும்மி நடனம் ஆடினர்.
இளைஞர்கள், சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வள்ளி கும்மி நிகழ்ச்சியை, சுற்றியுள்ள கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

